Friday, April 16, 2010

முதல்வர் விரும்பினால் அமைச்சர் பதவியை துறக்க தயார்: அழகிரி


''முதல்வர் கருணாநிதி விரும்பினால், அமைச்சர் பதவியை துறக்க தயார்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

முதல்வர் கருணாநிதிக்கு இணையான திறமை, கட்சியில் வேறு யாருக்கும் கிடையாது. தி.மு.க., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தினால், அதில் நிச்சயம் போட்டியிடுவேன். மத்திய அமைச்சர் அழகிரியின், சமீபத்திய இதுபோன்ற பேச்சுக்கள் தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்ற அழகிரி, நிருபர்களிடம் கூறும் போது, 'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கனிமொழிக்காக பதவியில் இருந்து விலகுவேன் என யார் சொன்னது? இதுகுறித்து கருணாநிதி, சோனியாவை சந்திக்க இருந்தாரா? என்பது எனக்குத் தெரியாது. இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment