Thursday, April 15, 2010

மகளுக்கு ஆசையாக வைத்திருந்த “சானியா” என்ற பெயரை மாற்றிய இந்து தம்பதி



மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த இந்து தம்பதி கீதா-மதன்லால். இவர்களுக்கு கடந்த 2002-ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த கால கட்டத்தில் சானியாமிர்சா புகழின் உச்சத்தில் இருந்தார். அவர் இந்திய நாட்டின் பெருமையை காத்ததால் மதன்லால் தனது மகளுக்கு “சானியா” என்று பெயரிட்டார். தற்போது அவரது மகளுக்கு 7 வயதாகிறது. அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் முதல் மாணவியாக இருக்கிறார்.

இந்நிலையில் சானியா, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை மணந்ததால் மதன்லால்-கீதா அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மகளுக்கு ஆசையாக வைத்த “சானியா” என்ற பெயரை “சங்கீதா” என்று மாற்றினர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, "சானியா மிர்சா நம் இந்திய வீரரை மணந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் வீரரை மணந்ததால் வேதனை அடைந்தோம்.

“சானியா” என்பது முஸ்லிம் பெயராக இருந்தாலும் நாட்டுப்பற்று கருதி நாங்கள் அவரது பெயரை வைத் தோம். எங்களுக்கு உள்ள இந்த நாட்டுபற்று சானியாவுக்கு இல்லாமல் போய்விட்டதே.

அவருக்கு இந்திய அரசு அளித்த சலுகைகளை வாபஸ் பெற வேண்டும் "

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment