Monday, April 19, 2010

மாடியில் இருந்து தள்ளினார்: இளம் பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலை


ஐதராபாத்தில் உள்ள தனியார் அழகு சாதன நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீதேவி (21). இவரது பூர்விகம் நேபாளம். டீதர் பகுதியை சேர்ந்தவர் வினோத். தனியார் நிறுவன ஊழியர். இவர் ஸ்ரீதேவியை கடந்த 3ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்தார். ஆனால் ஸ்ரீதேவி அவரிடம் நண்பர் போல பழகினார்.

பல தடவை வினோத் தனது காதலை தெரிவித்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி ஸ்ரீதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

அதன் பிறகும் வினோத் தனது முயற்சியை கைவிடவில்லை. ஸ்ரீதேவியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி கெஞ்சினார். அதற்கு அவர் நான் ஏற்கனவே சந்தோஷ் என்பவரை காதலிக்கிறேன் அவர் உன்னைவிட அழகாக இருப்பார் நீ என்னை மறந்துவிடு என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதன்படி நேற்று ஸ்ரீதேவியை அவர் வேலை பார்க்கும் “லைப்ஸ்டைல் கட்டிடத்துக்கு சென்று சந்தித்தார். பின்னர் அவரை ஏமாற்றி 4-வது மாடிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் திடீரென ஆவேசமாக அவர் ஸ்ரீதேவியை மாடியில் இருந்து தள்ளி தானும் கீழே குதித்தார். இதில் இருவரும் உடல் சிதறி பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வினோத் தனது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் "நான் ஸ்ரீதேவியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினாள். எனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment