Friday, April 23, 2010

நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவருமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை


நடிகரும், நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவருமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மலையாளத்தில் ‘நித்ரா’ என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீநாத் (50). இவர் தமிழில் ‘ரயில் பயணங்களில்’, ‘கள்வடியும் பூக்கள்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘ஷாலினி என்டே கூட்டுக்காரி’, ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ‘ஷிகார்’ என்ற படத்தில் நடிக்க எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்திற்கு சென்று இருந்தார் ஸ்ரீநாத். அங்குள்ள மரியா இன்டர்நேசனல் ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் போலீஸ் உதவியுடன் திறந்து பார்க்கப்பட்டது. அப்போது கையை அறுத்து தற்கொலை செய்து கிடந்தார் ஸ்ரீநாத். விசாரணையில் மோகன்லால் படத்திலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநாத், தமிழில், ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment