Wednesday, April 14, 2010

மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை

மது விருந்து கொடுத்து மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா கிளின்ட்ரி (25). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க 3 மாணவர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது மாணவர்களுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்தார். இதையடுத்து போதை தலைக்கேறியதும் மாணவர்கள் தங்களுக்குள் வினோதமான பந்தயம் கட்டினர்.

ஆசிரியை ஹன்னாவின் கன்னத்தில் முத்தமிடுபவருக்கு ரூ.150 வழங்குவது என முடிவு செய்தனர். ஒரு மாணவன் தைரியமாக அவரது கன்னத்தில் முத்த மிட்டு பந்தய பணத்தை தட்டிச் சென்றான்.

இதற்கிடையே போதை அதிகரித்ததால் 3 மாணவர்களும் அன்று இரவு ஆசிரியை வீட்டிலேயே தங்கினர். அப்போது, தனக்கு முத்த மிட்ட மாணவருடன் ஆசிரியை ஹன்னா “செக்ஸ்” உறவு வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றிய விவரம் தெரிய வந்ததால் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் நடந்த சம்பவத்தை அவர்கள் மறைத்து விட்டனர்.

இந்த நிலையில், ஆசிரியையுடன் “செக்ஸ்” உறவு கொண்ட மாணவன் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தான். போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை ஹன்னாவை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் பள்ளியில் இருந்தும் “சஸ்பெண்டு” செய்யப்பட்டார்.

- Madhumitha

No comments:

Post a Comment