Monday, April 12, 2010

ஜாக்சனின் முன்னாள் மனைவிகள் சாட்சியம் அ


பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் திடீர் மரணம் தொடர்பாக, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜாக்சனின் முன்னாள் மனைவிகள் சாட்சியம் அளிக்க உள்ளனர்.பாப் இசை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவரின் மரணத்திற்கு, அதிக அளவில் மாத்திரைகளை கொடுத்ததே காரணமென தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ஜாக்சனின் தனி டாக்டராக இருந்த கன்ராடு முரே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவிகளான டெப்பி ரோவோ, லிசா மேரி பிரஸ்லி ஆகியோர் சாட்சியம் அளிக்க உள்ளனர். அதில், ஜாக்சன் தொடர்பான பல விவரங்களை அவர்கள் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- மதுமிதா

No comments:

Post a Comment