Friday, April 23, 2010

குமுதம் எம்.டி வரதராஜன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

நிதி முறைகேடு செய்ததாக வந்த குற்றசாட்டின் பேரில் குமுதம் வாரஇதழின் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது செய்யப்பட்டார். குமுதம் வார இதழின் பதிப்பாசிரியராக இருப்பவர் வரதராஜன். இவர் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக குமுதம் இதழின் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வரதராஜனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் மீது 323, 344, 341, 342, 365, 307, 25(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட வரதராஜன் நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தார், பின்னர் தினமும் காலை 10 மணிக்கு மத்திய குற்றப்பிரிவில் கையழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்திரவுவிட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- மதுமிதா

No comments:

Post a Comment