Friday, April 16, 2010

பெங்களூர் மார்க்கெட்டில் நித்யானந்தா “செக்ஸ்” லீலை சி.டி. ஆயிரம் ரூபாய்



நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. சாமியாரின் சீடர்களில் ஒருவராக இருந்த சேலம் லெனின், வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன காமிரா மூலம் இந்த “செக்ஸ்” லீலைகளை படம் பிடித்திருந்தார்.

நித்யானந்தாவின் படுக்கை அறை காட்சிகளை அவர் சி.டி.க்களாக தயாரித்திருந்தார். அவற்றை போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்தார். இதன் மூலம் அந்த செக்ஸ் சி.டி. தமிழ்நாடு முழுவதும் பரவியது.

தற்போது நித்யானந்தா சி.டி. ஆந்திரா, கர்நாடகாவிலும் பரவத் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் உள்ள ஆங்காங் பஜாரில் சி.டி. விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வழக்கமாக சி.டி.க்களில் பதிவாகி வரும் படங்கள் ரூ. 20 முதல் ரூ. 150 வரை விற்பனையாவது உண்டு. ஆனால் நித்யானந்தா, ரஞ்சிதா சேர்ந்து இருக்கும் சி.டி.க்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் கடைக்காரர்கள் நித்யானந்தா செக்ஸ் லீலை சி.டி.க்களை தலா ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர்.

இந்த சி.டி.க்கள் வந்த உடன் விற்று தீர்ந்து விடுவதாக ஒரு கடைக்காரர் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று பெங்களூர் போலீசார் ஆங்காங் பஜாரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால் நித்யானந்தா சி.டி. எதுவும் சிக்கவில்லை.

மற்றொரு இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது 3 ஆயிரம் சி.டி.க்கள் சிக்கின. அவை அனைத்தும் நித்யானந்தா சி.டி.க்கள் என்று கூறப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் சேகர் இதுபற்றி கூறுகையில், நித்யானந்தா செக்ஸ் சி.டி.க்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்றார்.

போலீஸ் நடவடிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக பெங்களூர் ஆங்காங் பஜாரில் நித்யானந்தா செக்ஸ் சி.டி. விற்பனை குறைந்துள்ளது. நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நித்யானந்தா சி.டி.க்களை கடைக்காரர்கள் கொடுக்கிறார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம்தான் தலைமையிடமாக உள்ளது.

அந்த ஆசிரமத்தில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கடந்த திங்கட்கிழமை சோதனை நடத்தினர். இதில் பல ஆவணங்கள் சிக்கின.

இதுபற்றி கர்நாடக சி.ஐ.டி. எஸ்.பி. யோகப்பா கூறியதாவது:-

நித்யானந்தா மீதான வழக்கை கர்நாடக போலீசுக்கு தமிழக போலீசார் கடந்த மாதம் மாற்றியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்ற அனுமதியின் பேரில் அவருடைய ஆசிர மத்தில் சோதனை நடத்தினோம்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா பாலியல் உறவில் ஈடுபட்ட படுக்கை அறையிலும் சோதனை நடந்தது. இதில் சில ஆவணங்கள் கிடைத்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment