Wednesday, April 14, 2010

ரசிகரை அடித்த பிரியங்கா சோப்ரா: கூட்டத்தில் கட்டி பிடித்ததால் ஆத்திரம்


பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது 4 படங்கள் கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார். நேரம் இல்லாததால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கிறார். வெளியில் போகும்போது பாதுகாப்புக் காக தனியார் செக்யூரிட்டி கள் வைத்துக் கொள்கிறார்.

சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்தனர். விருந்து ஏற்பாடு செய்தவர் மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அங்கு போக முடிவு செய்தார். சூட்டிங் முடிந்து கேர வேனிலேயே டிரஸ் மாற்றிக்கொண்டு புறப்பட்டார்.

விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராள மான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டார். யாரும் எதிர்பார்க் காத வகையில் ஓடோடி சென்று அவரை கட்டிப்பிடித் தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்தனர்.

ரசிகரின் அத்துமீறலால் ஆத்திரமானார் பிரியங்கா சோப்ரா. அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விலகினர். பிறகு ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பிரியங்காவுடன் வந்த படப்பிடிப்பு குழுவின ரும் ரசிகரை பிடித்து நைய புடைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா" வேண்டாம் விட்டு விடுங்கள்" என்று கூறி விட்டார்.

விருந்துக்கு செல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார்.

No comments:

Post a Comment