Monday, April 12, 2010

இதுவரை சோயிப் மாலிக்குக்கு பாஸ் போர்ட் கிடைக்கவில்லை

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. திருமணம் முடிந்ததும் இருவரும் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தனர். 17-ந்தேதி லாகூரில் திருமண வரவேற்பு நடக்கிறது.

ஆனால் இதுவரை சோயிப் மாலிக்குக்கு பாஸ் போர்ட் கிடைக்கவில்லை. இதை பெற வேண்டும் என் றால் அவரது முதல் மனைவி ஆயிஷா கோர்ட்டில் ஆஜ ராகிதானும் மாலிக்கும் சமரசமாக செல்கிறோம். எங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.

அதன் பிறகே மாலிக்கிடம் கோர்ட்டு பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்.

அதுவரை சோயிப் மாலிக் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இதனால் திட்டமிட்டப்படி லாகூரில் திருமண வரவேற்பு நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது.

இதனால் சோயிப் மாலிக் கடும் அதிருப்தியில் உள் ளார். மேலும் இருவரும் நியூ சிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

பாஸ்போர்ட் கிடைத்ததும் எந்தெந்த நாடுகளில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்வார்கள் என்று சானியா குடும்பத்தினர் தெரிவித்தனர்.

- மதுமிதா

No comments:

Post a Comment