Monday, May 10, 2010

நான் இப்போ ‌ஹோப்பியா இருக்கேன்


பொதுவாக கமல்ஹாசனை வைத்து இயக்கவிருந்த பட வாய்ப்பு பறிபோனால் எந்த இயக்குனராக இருந்தாலும் வருத்தப்படுவார். ஆனால் வித்தியாசமான சிந்தனை கொண்ட மிஷ்கினோ இப்போ ஹேப்பியா இருக்கேன், என்று கூறி திரையுலக பிரமுகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறார். கமல் எத்தனை கெட்-அப் என்றாலும் அசராமல் போட்டு நடித்துக் கொடுக்கும் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை டைரக்டர் மிஷ்கின்தான் இயக்குவதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. மிஷ்கின் கமல் படத்தில் இருந்து விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா? என்ப‌தே ‌கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்குள் இன்னொரு பரபரப்பில் சிக்கியிருக்கிறார் மிஷ். கமல் படம் என்னாச்சு சார்?னு அவரிடம் கேட்டால்," அப்படியே நின்னுடுச்சு. நான் இப்போ ‌ஹோப்பியா இருக்கேன், என்று ராத்தின சுருக்கமாக பதில் சொல்கிறார். ஆயிரம் அர்த்தங்கொண்ட இந்த பதிலில் அப்பாட நிம்மதி... என்ற கருத்தும் அடங்கியிருக்கிறது என்பது திரையுலக பிரமுகர்களுக்கு புரியாமலா போகும். கமலை நேரில் சந்திப்பதையும், அவரு‌டன் போட்டோ எடுத்துக் கொள்வதையும் ‌பெருமையாக நினைக்கிற டைரக்டர்களுக்கு மத்தியில் அவரை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது பற்றி எந்த கவலையும் இல்லாமல் விவகாரமான பதிலை சொல்கிறாரே?" என கேள்வி கேட்கிறது கோடம்பாக்கம்.

No comments:

Post a Comment