Monday, May 31, 2010

பிராவுக்குள் ரூ.11 லட்சம்


ருமேனியா நாட்டை சேர்ந்த ஒரு பெண், ஹோலிகெட் துறைமுக நகரில் வந்து இறங்கினாள். அவளது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் அவளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது டியூபிளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்ததாக அவள் கூறினாள். அவளை சோதனை செய்தபோது பிராவுக்குள் ரூ.11 லட்சம் (22 ஆயிரம் டாலர்கள்) மறைத்து வைத்து இருந்தாள். இந்த பணம் எப்படி கிடைத்தது என்று அவளிடம் கேட்டபோது அயர்லாந்தில் சம்பாதித்தது என கூறினாள்.

ஆனால் அதற்கான ஆதாரத்தை அவள் தரவில்லை. எனவே அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment