Wednesday, February 8, 2012

Baby Chun Chun is a record-breaking 7kg baby.


A mother in central China has given birth to a 15.52 pound (7.04kg) baby, possibly the largest newborn on record since the country's founding in 1949.

The state-run Tianjin Post said the 29-year-old mother in Henan province gave birth to the boy Saturday by caesarean section. It said delivery took just 20 minutes and both mother and the baby, named Chun Chun, are doing fine.


Baby Chun Chun is a record-breaking 7kg baby.

The paper said Chun Chun's parents are average size and there was nothing unusual about his mother's pregnancy or diet.

The paper said it wasn't immediately clear whether Chun Chun made China's record books.

Guinness World Records says the heaviest newborn ever recorded was born to an Ohio woman in 1879 and weighed 23.7 pounds (10.77kg).

Thursday, October 13, 2011

Message time


Message

Being happy doesn't mean everything is perfect. It means you have decided to look beyond the imperfections. I used to hate my imperfection, but now I have learnt to accept it with open arms.

- Winnie Chin

Sunday, April 24, 2011

Friday, July 23, 2010

A choronicle of world cinema







Review appered in Hindu on April 6th of 2010. - -Meera Srinivasan
Coming at a time when Indian cinema and particularly Tamil Cinema is witnessing some intersting changes , this book by Sivan chronicle the evolution of world cinema in a simpale and lucid manner. He takes the reader on a journey through world cinema not by tracing innovations and momentes develeopments but by relating stories about the people behind them.

Early on , the authour transports the reader to the late 19th century France as the projects the seen, in the dark hall of hotel Grand day cafe with about thirty five people , when the first ever motion picture , ' workers leaving the lumiere factory ', of the lumiere brothers , was screened . Sivan looks at the History of cinema in three significant time - spanes.1885 - 1929 ( silent films ) ; 1930 - 1960 ( talkies ) and 1961 to 2008 ( Modern Cinema ). If the treatment is systamatic the narrative and the deatails provided testify to the amount of research perservance that has gone in to the product.

In the later part of the book , the authour looks at some of the leading techinicians and actors of the Industry , and highlights , their contribution .

A valuable guide to understanding the medium through a historical persepective , it is bound to keep the lay cinema buff as well as the connoisseur engaged.

The production of the book is in the international standard and priced at the lowest for Rs.440.Total number of pages 708 , and its includes valuable photos more than 500.
This can be had at Vadhini Book Sellers or Sri Bhagavathy Puthagallayam at 19/20 , Rani Anna Nagar , P .T. Rajan Salai , K.k. Nagar , Chennai 600 078.For tamil nadu buyers can send the money order to the above address with Rs.50 for the Courier Charges.Other than Tamil Nadu please add Rs.70.Out side India readers kindly check with us through e mail for the shipping charges at vadhini@ yahoo.co.in and sribhagavathiputhakaalayam@gmail.com

Release function still courtesy : Dianamalar.

Thursday, July 22, 2010

The best Book for computer learners.


computer vocabulary

The best Book for computer learners.

From age 8 to 60.

Simplest vocabulary book for you.

Available at.

poombuhar Pathippkkam ,

67, Broad Way,

Chennai - 600 107.

Phone : 00914425267543

puthiya tamil puthakkam



Malay thesathu nadodi kathaigal

Tamil short stories

By Suprajaa

Published by:

Poomipuhar Pathippakkam,
67, Broad way,
Chennai - 600 106.

Phone : 00914425267543

Monday, June 28, 2010

Prince William had no money


Prince William of Wales was caught in an embarrassing situation when he had no money to pay for his shopping.

The prince, who is second in the line of succession to the British throne, turned to his girlfriend Kate Middleton for help but she had no money either.

The couple ended up paying for their £12.60 (RM61) worth of groceries with Middleton's platinum credit card.
A file photo of Prince William and Kate Middleton

A file photo of Prince William and Kate Middleton

Dressed casually and hidden behind steel-framed glasses, William and Middleton popped into a mini-market in the small town of Blaenau Ffestiniog, North Wales, on a Sunday night.

After a while, William took the basket containing two pizzas, a bag of chips, an iceberg lettuce, a bag of salad leaves, a bottle of orange juice and two bottles of water to the counter.

Immediately, he was recognised by shop assistant Sioned Compton, who excitedly exclaimed: "Oh my God! You're Prince William, aren't you?"

He just looked down at his feet and muttered: "No. No, I'm not."

Knowing that she had spoken 'out of turn', Compton did not press the issue and proceeded to put his shopping through the till.

Soon, the 28-year-old prince realised that he had no money and asked his girlfriend: "Can you pay, please? I've not got any cash."

But Middleton had none either, so she had to produce her credit card that confirmed William's identity.

"I couldn't believe it when he rocked up at our store. I noticed someone from his security team accompanied him and stood at the entrance.

"Wills was driving an Audi. There appeared to be no other passenger but there were two other cars – one in front and one behind – when he pulled away," said Compton.

She said she was disappointed that William did not admit that he is the prince.

"He must have had his reasons," she added.

Source: Mail Online, UK

Brazilian goalie suspected of beating girlfriend to death


Police say they'll question the goalie of Flamengo, one of Brazil's most popular soccer teams, in the disappearance and possible death of a 25-year-old woman said to be the mother of his child.

Police chief Alessandra Wilke in the central Brazilian town of Contagem told TV Globo that Flamengo club's Bruno is suspected along with two friends of having beaten Eliza Samudio, who has been missing for three weeks.

Wilke said Sunday that Samudio "probably died and they hid the body."

She also said that police believe Samudio to be the mother of a child from a relationship with the 25-year-old Bruno, whose full name is Bruno Fernandes de Sousa.

Michel Assef Filho is a lawyer for Bruno and for Rio-based Flamengo. He told Globo TV that the player insists he is innocent

Wednesday, June 23, 2010

அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்



``கடையில் நான் எனக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்போது அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்

கஜோலும், அஜய் தேவ்கனும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் கசிந்ததும் இந்தித் திரையுலகமே ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தது. காரணம், இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரெதிரானவர்கள். கஜோல் படபடவென்று பேசுவார், அஜய் பேசவே மாட்டார், கஜோல் கலகல சுபாவம் கொண்டவர், அஜயோ கலந்து பழகாத கூச்ச சுபாவம் கொண்டவர், கஜோல் சிவப்பு, அஜய் மாநிறம், கஜோல் அழகுத் தாரகை, அஜய் ஆணழகன் என்று கூற முடியாதவர்...

எப்படி இவர்களுக்குள் ஒத்துப் போகும் என்று ஒட்டுமொத்தத் திரையுலகமும் முணு முணுத்தது. ஆனால் இன்றோ, `தம்பதிகள்னா அவங்கள மாதிரித்தான் இருக்கணும்' என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

``எப்போதும் உற்சாகமும் துடிப்புமாக இருப்பவர் கஜோல். நானோ அதிகம் வாய் திறந்து பேச மாட்டேன். ஆனால் எங்களின் வேறுபாடுகளே நாங்கள் ஒன்று சேர்ந்தபோது எங்களை முழுமையாக்கி விட்டன. நான் ஒரு பெண்ணிடம் விரும்பிய அனைத்தும் கஜோலிடம் இருக்கின்றன'' என்று பெருமிதமான கணவராகக் கூறுகிறார் அஜய்.
அதேநேரம், தனக்கே உரிய தனிச்சிறப்பான கண்கள் சிரிக்க கஜோல், ``திருமணத்துக்குப் பின் நான் எல்லையற்று வளர்ந்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். என் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த விஷயம், திருமணம். சரியான நபர் என்று ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எனக்காகத் தேடிக்கொண்ட இவர்தான் அவர்'' என்று பூரிக்கிறார்.

``வழக்கமான `ஐ லவ் ï' சொல்லும் வேலையெல்லாம் நடக்கவில்லை. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம், இயல்பாக பழகினோம், ஒருகட்டத்தில் நட்பைத் தாண்டிய ஒன்று எங்களுக்கு இடையே மலர்ந்திருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதைப் பற்றி பெரிதாகப் பேசவில்லை. திருமணம் தானாகவே நடந்துவிட்டது'' என்கிறார் அஜய் தேவ்கன்.
உங்கள் திருமண வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டால் கஜோலின் பதில்-
``ரகசியம் என்றெல்லாம் எதுவும் இல்லை. கணவன்- மனைவிக்கு இடையே பரஸ்பர அக்கறை என்பது அவசியம். வெறுமனே `ஐ லவ் ï' சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. மகள் `நைசா'வைப் போலவே அவர் மீதும் நான் யாரும் இடைபுகாத அன்புடன் இருக்கிறேன். அதேநேரம் அவருக்கு என்று சுதந்திரம் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதே உணர்வு அவருக்கும் உண்டு. எங்களுக்கு இடையே வாக்கு வாதமோ, சண்டையோ வந்ததில்லை என்று நான் கூற மாட்டேன். அவைதானே வாழ்க்கையில் சுவை சேர்க்கின்றன?'' என்று நடைமுறை சார்ந்தவராகப் பேசுகிறார் கஜோல்.
கஜோல் கர்ப்பமாக இருந்தபோது, படப்பிடிப்பில் இருந்தாலும் மணிக்கொரு முறை அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தாராம் அஜய். கஜோலுக்கு தினசரி ஒரு பெட்டி பழங்கள் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்.
``இன்றும் ஒவ்வொரு நாள் மாலையும் வீட்டில் கஜோலைப் போய் பார்க்கும்போது, நாங்கள் ஆரம்பத்தில் பழகியபோது இருந்த அதே உற்சாகமும், ஆர்வமும் எனக்கு இருக்கிறது'' என்று வார்த்தைகளில் சந்தோஷத்தை வழிய விடுகிறார் அஜய்.
அஜயைப் பற்றி கஜோல் ஒருமுறை கூறும்போது, ``அஜயிடம் எரிச்சலூட்டும் பழக்கங்கள் அதிகம் இருக்கின்றன என்றபோதிலும், அஜய் அல்லாத ஒருவரை நான் விரும்பியிருக்க மாட்டேன். ஒரு கச்சிதமான மனிதர் என்பவர் போரடிப்பவராகத்தான் இருப்பார். அஜய் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு கொண்டவர், நல்ல சமையல் கலைஞர், தூய்மையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்''" என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்புரை


நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், கூட்டி யிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, இப்போது தொடங்குகிறது!

மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றுவதற்கு; தமிழ் மக்களின் அன்பான அழைப்பினை ஏற்று, இங்கே வருகை தந்திருக்கும், மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான, முதல் பெண் வேட்பாளர் என்கிற முறையில், உங்களை ஆதரித்து, சென்னையில், நடைபெற்ற மாபெரும் மகளிர் பேரணியின்போது, முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், உங்களு டைய அரும்பணிகளுக்கு அரிய துணையாக, நாமெல் லோரும் இருப்போம், என்று சொன்னதை நினைவு கூர்ந்து, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராகிய உங்களை, தமிழ் நாட்டு மக்களின் சார் பாக, வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, உரையாற்ற வருகை தந்துள்ள, மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே! முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எந்நாளும் இனிய நண்பராக உள்ள உங்களை, மாநாட்டுத் தலைமைக் குழுவின் சார்பில், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தொடக்க விழாவின் தலைவர், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களே! தமிழகத்தின் பெருமையைச், சங்ககாலம் போல, மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற, கனவை நனவாக்க விடாமுயற்சி மேற்கொண்டுள்ள, சிறந்த அறிஞர் கலைஞர்Ó என்று, டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட, தமிழறிஞர்களால் பாராட்டிப் போற்றப்பட்டுள்ள உங்களை; இங்கே கூடியிருக்கும் தமிழ் மக்களின் சார்பாகவும், மற்றும் அனைவர் சார்பாகவும், வருக! வருக! என்று வரவேற் கிறேன்.

தகுதியுரை வழங்கவுள்ள, நிதியமைச்சர் பேராசிரியர் அவர்களே!

தலைவர் கலைஞர் அவர் களோடு என்றென்றைக்கும், இணைந்து, ஈடற்ற பணியாற்றி வரும் உங்களை, மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார் பாக வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே! சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களே! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் களே! மாநாட்டுக்காக அமைக் கப்பட்டிருக்கும், பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப் பாளர்களே! உறுப்பினர் களே! தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே, அலுவலர்களே! ஆசிரியப் பெருமக்களே! தொழிலா ளத் தோழர்களே! பெரியோர் களே, தாய்மார்களே, நண் பர்களே! உங்கள் அனைவரையும் வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்மொழி, உலகின் மிக உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும், பெற்றுத்திகழும் உயர்தனிச் செம் மொழிகளுள் ஒன்று என்ப தனை, நான் எவ்விதத் தயக்கமுமின்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன் என்று பிரகடனம் செய்து,- பன்மொழிப் புலவராகத்திகழும், ஆய்வரங்க ஆலோசனைக் குழு உறுப்பினர், அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களே! உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ், இன்று ஒரு மாநில மொழி மட்டுமன்று; ஒரு நாட்டுமொழி மட்டுமன்று; அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி. தமிழ், உலகு தழுவி வாழும், ஒரு மொழிக்குடும்பத்தின் தாய் மொழி என்பது, உலகு ஒப்பிய உண்மைÓ என்று எடுத்தியம்பிய, உலகத் தமிழாய்வு நிறுவனம் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆகியவற்றின் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களே! உங்களை வருக!வருக என்று வரவேற்கிறேன்.

தமிழ் ஆய்வு, மற்றும் தமிழ் விமர்சனம் ஆகிய வற்றைப், பல்துறை சார்ந்த பரிமாணங்களில், வெளிப்படுத்தும் திறன் மிக்க வரும்; தமிழ்ச் சமூக வர லாற்றை, பல்வேறு தரவுகளின் ஊடாக எழுதும் வாய்ப்பினைப் பெற்று, சரியான புரிதலை உருவாக்கிய; முதுதமிழ்ப் பேராசிரியருமாகிய, மாநாட்டு ஆய்வரங்கத்தின் அமைப்புக் குழுத்தலைவர், இலங்கை நாட்டுப் பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்களே! உங்களை வருக! வருக! என்று வர வேற்கிறேன்.

சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; அங்கே இருந்தவர்கள் திராவிட மொழி பேசியவர்களே என்று, உலகெங்கிலும் உள்ள ஆய்வறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஆதாரங்க ளோடு நிரூபித்துக் காட்டிய வரும்,

முதல், கலைஞர் செம் மொழி விருதினைப் பெற்று, ஏற்புரை ஆற்ற வருகை தந்தி ருக்கும், பின்லாந்து நாட்டுப்பேராசிரியர், அஸ்கோ பர்ப்போலா அவர்களே! உங் களை வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்ச் சான்றோர்களே! தமிழறிஞர்களே!

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; அன்னார், உள்ளத்தால் ஒரு வரே!

மற்றுடலினால் பலராய்க்காண்பார்!

என்ற பாவேந்தர் பாரதி தாசன் பாடல்வரிகளுக்கேற்ப; இங்கே ஆயிரம், பல்லாயிரம், இலட்சோப லட்சமெனத்திரண் டிருக்கும் தமிழ்ப் பெரு மக்களே! உங்கள் அனை வரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வன்மை, தாய்மை, தூய்மை, செம்மை, முழுமை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய அனைத்தையும், பெற்றுள்ள ஒரேமொழி தமிழ்மொழி தான் என்று, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறிவித்தார்.

தமிழை- அமுதத்தமிழ், இன்பத்தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத்தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், சுந்தரத் தமிழ், தூய தமிழ்,

தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் - என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும், போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.

தமிழ், உலகின் மூத்த மொழி மட்டுமல்ல; முதல் செம்மொழியும் ஆகும். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன்,

கனியிடை ஏறிய சுளையும்-

முற்றல், கழையிடை ஏறிய சாறும்;

பனிமலர் ஏறிய தேனும்,-

காய்ச்சுப், பாகிடை ஏறிய சுவையும்;

நனி பசு பொழியும் பாலும்-

தென்னை, நல்கிய குளிர் இளநீரும்;

இனியன என்பேன்; எனினும், -

தமிழை, என்னுயிர் என் பேன் கண்டீர்! - என்று உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

அண்ணல் காந்தியடிகள்; எனது வாழ்க்கையில், ஏதாவது ஒன்றைப் பற்றி நான் வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த மொழியாகிய, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லையே, என்பது பற்றித்தான் என்று தமிழ்மொழியை பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் அவர்கள், ஒரு தமிழனாகப் பிறக்க வில்லையே என ஏங்கினார்.

அவர், தான் தமிழ் மொழியின்பால் கொண்டபற்றின் அடையாளமாக, தமது கல்லறையில், ஜி.யு.போப், ஒரு தமிழ்மாணவன் என்று பொறிக்க வேண்டுமென விரும்பினார்.

அத்தகைய ஈர்ப்பும், இன்ப மும் கொண்டது தமிழ் மொழி. அத்தமிழ் மொழியை, முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதற்கான, வழிவகைகளை வகுத்துச் செயல்படுத்திட, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தலைவர் கலைஞர் அவர்கள் இங்கே கூட்டியிருக்கிறார்கள்.

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை, மூச்சினை உனக்களித்தேனே! நைந்தாய் எனில், நைந்து போகும் என்வாழ்வு; நன்னிலை உனக்கெனில், எனக்கும் தானே! - என்ற உள்ளத்து உணர்வோடும், எழுச்சி யோடும், இங்கே திரண்டிருக்கும், உங்கள் அனை வரையும் வருக! வருக! என்று, உள்ளன்போடு, மகிழ் வோடு வரவேற்று விடை பெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Monday, May 31, 2010

பிராவுக்குள் ரூ.11 லட்சம்


ருமேனியா நாட்டை சேர்ந்த ஒரு பெண், ஹோலிகெட் துறைமுக நகரில் வந்து இறங்கினாள். அவளது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் அவளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது டியூபிளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்ததாக அவள் கூறினாள். அவளை சோதனை செய்தபோது பிராவுக்குள் ரூ.11 லட்சம் (22 ஆயிரம் டாலர்கள்) மறைத்து வைத்து இருந்தாள். இந்த பணம் எப்படி கிடைத்தது என்று அவளிடம் கேட்டபோது அயர்லாந்தில் சம்பாதித்தது என கூறினாள்.

ஆனால் அதற்கான ஆதாரத்தை அவள் தரவில்லை. எனவே அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Thursday, May 27, 2010

அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்



"வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், வைகைச் செல்வன், மாவட்டச் செயலர்கள் சேகர்பாபு, செந்தமிழன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கள் மதுசூதனன், பொன்னையன், வளர்மதி, முன்னாள் எம்.பி., கோகுல இந்திரா உட்பட ஏழு பேர் பேசினர்.

அவர்களில் சிலர் பேசியதாவது: "முத்துசாமி தனது மனக்குறைகளை என்னிடம் சொல்லலாம், அவரது பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என்று ஜெயலலிதா கூறினார். ஆனால், முத்துசாமி இந்த செயற்குழு கூட்டத்துக்கு வரவில்லை. முத்துசாமி கட்சியை விட்டு வெளியேறுவதால் அ.தி.மு.க.,வுக்கு எந்த சேதாரமும் இல்லை; அவரது கடிதமும் வரவில்லை. ஜனதா கட்சியிலிருந்து அவர் வந்தவர். அவர் உண்மையான கட்சிக்காரர் கிடையாது; அவர் ஒரு டூப்ளிகேட். கொள் கையை அடகு வைத்து விட்டார். தேர்தல் சுற்றுப் பயணத்தில் மக்களிடம் ஜெயலலிதா தனது முகத்தைக் காட்டினால் போதும். மக்கள் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் போடுவதற்கு தயாராக உள்ளனர். சுற்றுப்பயணம் செல்லும் போது வேனில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவை ஒரு சிலர் தான் பார்க்க முடிகிறது; பலர் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். அனைவரும் பார்க்கும் வகையில் பாதுகாப்பு வசதி கொண்ட வேனில் ஜெயலலிதா நின்று கொண்டு பிரசாரம் செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டச் செயலர்கள் தனக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கும் வகையில் செயல்படுகின்றனர். இதனால், கட்சியினர் அதிருப்தி அடைகின்றனர். முத்துசாமியை உடனடியாக கட்சியை விட்டு நீக்குங்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: முத்துசாமியின் மனக்குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம், அவரது பிரச்னையை சொல்லி தீர்வு காணலாம் என அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அவரும் தனக்கு உடல்நலம் சரி இல்லை என்றும், கடிதம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அவர் என்னை சந்திக்க வருவார் என எதிர்பார்த்தேன்; அவர் வரவில்லை. எனக்கு 62 வயதாகிவிட்டது. பக்குவம் அடைந்த ஒரு தாயாக இருக்கிறேன். இந்த இயக்கத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதை கூட நான் விரும்ப மாட்டேன். அண்ணாதுரை, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின்படி தான் நான் நடந்து வருகிறேன். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சிலர் நினைத்தனர். பல போராட்டங்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என்னை பழித்து பேசியவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்துள் ளேன். எம்.எல்.ஏ., அமைச்சர் என பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்துள்ளேன்.

சில தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம்; மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறோம். அனைவரும் கோஷ்டிப்பூசல் இல்லாமல் கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும். கட்சியினருக்கு மனக்குறைகள் இருக்கலாம். உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியும். கட்சியில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி உண்டு. மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சி மலரும். குடும்ப ஆட்சியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைப்போம். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட புதிய சட்டசபை நமக்கு தேவையில்லை. பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நமது ஆட்சியை நடத்துவோம். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

முதல்வரை துதி பாடுவதற்காக செம்மொழி மாநாடு: "மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக் குரியது' என, அ.தி.மு.க., செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உலகில் உள்ள தமிழ் இனமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில், உலகத் தமிழ் மக்களின் பணத்தை வீணாக்கி செம்மொழி மாநாட்டை தி.மு.க., நடத்துகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக்குரியது.

* முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தும் அதை செயல்படுத்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேரளாவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளார். ஆந்திர அரசு பாலாறு, பென்னையாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

* தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் கங்கை, காவிரி இணைப்பு என்பது தென்னக நதிகள் இணைப்பு என மாறி விட்டது. பின், தமிழக நிதிகளின் இணைப்பு என்று சுருங்கி விட்டது. தேசிய நதி நீர் இணைப்பின் அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தாத தி.மு.க., அரசிற்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

* தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (கோவை), அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (நெல்லை) என பிரிக்கப்பட்டது. தனக்கு வேண்டியவர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெறுவது தான் இதன் நோக்கம். தற்போது மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் இது போன்ற நடவடிக்கை ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை



சென்னை கோளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., படிக்கும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, கல்லூரி மாணவர்கள் கல்லூரியை அடித்து நொருக்கினர். கல்லூரி தலைவர் திட்டியதே, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரியில் உள்ள கதவு, ஜன்னல்கள் ஆகியன அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது!


மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். இந்த துயரம் அடங்குவதற்குள் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

வெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65 பேர் வரை உயிரிழந்து விட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர்.

கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை.


இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

வெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.


தாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.


நாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.

நீங்கள் கேட்க வேண்டிய பாடல்

Rosie Huntington-Whiteley to star in 'Transformers 3'


British model Rosie Huntington-Whiteley will take over as the leading lady in upcoming blockbuster 'Transformers 3'.

The Victoria's Secret pin-up, 23, was offered the role in the sequel after Megan Fox sensationally quit the franchise last week.

Since then speculation has centred on a range of beautiful actresses to replace her including Gemma Arterton, Zoe Saldana, Vanessa Hudgens, Amber Heard, Emmanuelle Chriqui, and Ashley Greene.

More details have emerged over why Fox left the franchise.

Director Michael Bay reportedly came to blows with the 24-year-old Fox over her plummeting weight.

Her slender physique sparked concern and "unhealthy" Fox was ordered to put on weight, sources claimed.

Huntington-Whiteley, who is currently dating British hard man Jason Statham and counts French actor Olivier Martinez as her ex, holds no acting credentials to date.

When Fox was cast back in 2007 for the first Transformers flick, she already made several TV appearances and starred in Confessions of a Teenage Drama Queen with Lindsay Lohan.

Huntington-Whiteley follows in the footsteps of Bond girls Olga Kurylenko and Halle Berry, who also made the leap from catwalk to silver screen.

Despite rumors Fox was sacked from the film, her spokesman insisted "It was her decision not to return."

Model turned 'Narco Queen' nabbed


A Colombian model accused of leading a drug-trafficking gang that persuaded pretty young women to smuggle cocaine to Mexico was arrested Wednesday after evading Argentine police for five months.

Angie Sanclemente Valencia had been hiding out in Buenos Aires since December, when airport police caught a 21-year-old Argentine woman with 55 kilograms of cocaine in her baggage boarding a flight to Cancun.

That led to arrests of six other alleged gang members who allegedly fingered Colombia's former "coffee queen" as a ringleader.

Argentina's media quickly dubbed Sanclemente the "Narco Queen," but two officials involved in the case told The Associated Press that her specific role in the smuggling organization has not been established.

"When they organized the trafficking of cocaine to Mexico, she participated in the meetings," said one of the sources, both of whom agreed to discuss the case on condition they not be identified because the investigation was still open.

Police were able to determine Sanclemente's identity because she had made quite an impression upon her arrival in Argentina, flying first class with a Pomeranian dog, the other official said.

The 30-year-old model was captured Wednesday in a hostel for foreigners in the fashionable Palermo neighborhood, airport police spokesman Maximiliano Lencina said.

Lencina declined to discuss the evidence, but said Sanclemente "was an important figure in the organization" that allegedly recruited pretty young Argentine women to smuggle cocaine on flights to Cancun.

Police figured she was still in Argentina: She declared her innocence on Facebook, where she posted pictures of Buenos Aires dated after Interpol issued a warrant for her arrest, and her mother arrived in the country weeks ago to help with her defense.

"She is no drug trafficker, nor is she the queen of cocaine," her mother, Jeannette Valencia, declared after the arrest.

"There are bad intentions - a plot against her. She will prove her innocence," Valencia told reporters after police prevented her from entering her daughter's room.

Judicial authorities already rejected a request for special treatment from her lawyer, Guillermo Tiscornia, who said Sanclemente had not turned herself in for fear that her looks would expose her to rape or other mistreatment in a common prison.

Sanclemente had "fear that they will rape her, that they will cut her face" in prison, her mother added.

"I feel great anguish and desperation. I can't rest, I'm very sad that the Argentines have treated me so badly, wiping away the trash with me. I don't deserve this," Valencia told the Colombian newspaper El Tiempo.

Sanclemente, a native of Barranquilla, Colombia, won her country's National Coffee Queen beauty pageant in 2000.

Then 21, she was forced to give up her crown when it was discovered she was married at the time in violation of pageant rules.

இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்


பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை, திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.

சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.

Saturday, May 22, 2010

விபத்தில் இந்திய விமானம் எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கரம்?


துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து விமான துறை அதிகாரிகள் உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான விபத்து நடந்தது எப்படி ? : . ஏர் இந்திய விமானம் ( எக்ஸ்1 892 ) விபத்தில் சிக்கியுள்ளது. காலை 6 .30 மணியளவில் மங்களூருவில் இறங்கும்போது வானிலை மோசமாக இருந்துள்ளதுபோதிய வெளிச்சம் கிடைக்காதததால் வழி தெரியாமல் போகவே விமானஓட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை , விமானம் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லைவிமானம் நிலைதடுமாறியது. தொடர்ந்து விமானம் தூக்கி வீசப்பட்டது. இதில் தீ பிடித்து எரிந்தது. இதில் இருந்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் அலறல் சப்தம் மட்டுமே போட முடிந்தது. சில நொடிப்பொழுதில் 160 உயிர்களையும் தீச்சுவாலை விழுங்கி கொண்டது.

விமானம் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஓடுதளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் சிதறியபடி உயிருக்கு போராடும் பயணிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. 19 பேர் குழந்தைகள் என தெரிகிறது. இறந்தவர்கள் குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து விடும் என்றார் விமான துறை இயக்குனர் எஸ். என்.ஏ., சைதீ.

பெரும் சப்தம் கேட்டது ; உயிர் பிழைத்தவர் பேட்டி : இந்த விபத்தில் தப்பிய அப்துல்புத்தூர் கூறுகையில் ; விமானம் விழுவதற்கு முன்னாள் நான் குதித்தேன். விமானம் விழும் போது பெரும் சப்தம் கேட்டது. முன்னதாக டயர் வெடித்து சப்தம் காதை பிளந்தது. கையில் இருவரை இழுத்து கொண்டு கீழே விழுந்தேன் என்றார். எல்லாம் இரண்டு நொடிப்பொழுதில் நடந்து முடிந்தது. நாங்கள் உயிர் பிழைப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்றார். இவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதமர் விசாரித்தார்: மங்களூரு விமானம் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சருடன் நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். காங்., தலைவர் சோனியாவும் கவலை தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்தை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனை விருந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்., கட்சி அறிவித்துள்ளது.

விமானதுறை அமைச்சர் விரைகிறார்: விமான துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைகிறார். அங்கு நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை கவனிக்கிறார். இத்துடன் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா ஆகியோரும் விரைந்துள்ளனர்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் யார் ? : அப்துல்லா, சப்ரீனா, ஒமர் பரூக், ராய் ஜோயல், கிருஷ்ணா, பிரதீப், முகமது, பிரதாப் டிசோசா ஆகிய 8பேர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அப்துல்லா தப்பி ஓடும்போது கையில் சிலரை இழுத்துகொண்டு ஓடியபடி காப்பாற்றியுள்ளார். கர்நாடக மாநில எம்.எல்.ஏ., ஒருவரும் சிக்கி இறந்துள்ளார். பெங்களூர் சாந்திநகர் தொகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் கருகி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்: விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள் 150 பேர்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு அவசரகால படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த விமான விபத்துகள்: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் இன்று நடந்த விபத்து 100 க்கு மேற்பட்டோர் பலியான சம்பவம் ஆகும்., பீகார் மநிலம் பாட்னாவில் 2000 ம் ஆண்டில் ஜுலை மாதம் 17 ம் தேதி நடந்த விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். சமீப கால விமான விபத்துகள் விவரம் வருமாறு :

1978 ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி ஏர் இந்திய விமானம் அரபிக்கடலில் விழுந்ததில் 213 பேர் கொல்லப்பட்னர்.

1982 ம்ஆண்டில் ஜூன் மாதம் 21 ம் தேதி ஏர் இந்திய விமானம் மும்பை விமான நிலயைத்தில் சிக்கியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 94 பேர் உயிர் பிழைத்தனர்.

1988 ம்ஆண்டில் அக்டோபர் 19 ம் தேதி ஆமதாபாத்தில் 124 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் உயிர் பிழைத்தனர்.

1990 பி்ப்., மாதம் 14 ம் தேதி பெங்களூருவில் நடந்த விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

1991 ம் ஆண்டில் இம்பாலில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

1993 ல் ஏப்ரல் மாதம் 26 ல் மகாராஷ்ட்டிராவில் அவுரங்காபாத்தில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

1996 ம் ஆண்டில் நவம்பர் 12 ம் தேதி அரியானாவில் 349 பேர் ‌கொல்லப்பட்டனர்.

2000 ம் ஆண்டில் ஜூலை 17ம் தேதி பாட்னாவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

லிபியா விமானம் விபத்தில் சிக்கியதில் 103 பேர் இறந்தனர். போலந்து நாட்டு அதிபர் சென்ற விமானம் வெடித்து சிதறியதில் பலியானார். ஏமனி விமானம் விபத்தில் 153 பேர் பலியாயினர். சமீபத்தில் யு.ஏ.இ விமானம் தடுமாறி பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

விபத்து குறித்து விசாரிக்க ‌ஹெல்ப் லைன் : விபத்து குறித்து விசாரிக்க விமான துறை ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது. 011- 25656196 , மற்றும் 011- 25603101 ஆகும். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பயணிகளின் உறவினர்கள் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

Monday, May 17, 2010

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார்


பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 62. இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக் கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார்.இவர் எழுதிய, 'சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவரது, 'மழைக்கால மல்லிகைகள், சந்திப்பு தொடரும்' நாவல்கள் பிரபலமானவை.

'தினமலர்' வாரமலரில், 'அன்புடன் அந்தரங்கம்' தொடர் எழுதி வந்தார். அவரது எழுத்துக் கள் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத்தந்தன.சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் ராஜகோபால் முதல் தெருவில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், நேற்று மாலை மாரடைப் பால் இறந்தார். அவரது உடல் நேற்று இரவு வால்மீகி நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு சுதா, சுபா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அனுராதா ரமணனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது.